பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாகப் பகிரப்பட வேண்டும் – அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை.

நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாகப் பகிரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியம் சார்ந்து வடக்கு, கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே பெண்கள் குழு இவ்வாறு கூட்டாக அறிவித்துள்ளது.