இலங்கைக் கடற்பரப்பில் தொடர்ந்தும் கைதாகும் இந்திய மீனவர்கள்.

இலங்கை, கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில்  17 இந்திய மீனவர்களைக் கைது செய்துள்ளதாகக்  கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் இன்று (29.09) ஞாயிறு,அதிகாலை இலங்கை கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

கைதான மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட தலைமன்னார் கடற்படையினர், இன்று (29.09) மாலை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கைதான 17 மீனவர்களைஒப்படைத்துள்ளனர்

இதன்போது யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளும் வருகை தந்து மீனவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த 17 இந்திய மீனவர்களையும் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) மாலை மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்

.

ரோகினி நிஷாந்தன்

Leave A Reply

Your email address will not be published.