ஜனாதிபதியின் ஒவ்வொரு நியமனத்திலும் ஒரு பிரச்சனை.. சிலருக்கு வழக்கு.. சிலருக்கு நீதிமன்றத்தால் தண்டனை..

அநுர திஸாநாயக்கவை ஜனாதிபதியாக நியமித்ததன் பின்னர் வழங்கப்பட்ட அனைத்து நியமனங்களிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவர்களில் சிலருக்கு நன் நடத்தை தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாகவும், சிலர் நீதிமன்றங்கள் மூலம் தண்டிக்கப்படுபவர்கள் என்றும், சிலருக்கு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, ​​தற்போதுள்ள 42 சதவீத வாக்குகளை இழக்க நேரிடும் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை ஒரு எழுத்து கூட பிசகாமல் தொடரும் குழு ஒன்று அனுர திஸாநாயக்கவுடன் இருப்பதாக கூறிய அவர், ‘ரணில் என்றால் அனுர… அனுர என்றால் ரணில்’ என தெரிவித்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.