முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு அறிவிப்பு

எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு துப்பாக்கிகளை பெற்ற முன்னாள் எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற சேவைகள் பிரிவு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

225 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிட்டத்தட்ட நூறு பேர் பாதுகாப்பு துப்பாக்கியைப் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் இல்லாதொழிக்கப்படும்.

MP அலவன்ஸ், க்ரூ அலவன்ஸ், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் முத்திரைக் கட்டணம் ஆகியவை பறிக்கப்படும்.

எவ்வாறாயினும், மாதிவேல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் இருந்து எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடியிருப்புகளை மட்டுமே தேர்தல் நடைபெறும் நாள் வரை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாத அனைத்து எம்.பி.க்களும் வாக்குப்பதிவு முடிந்த அன்றே மீண்டும் தங்களுடைய குடியிருப்புகளை அரசிடம் வழங்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.