ரி – 56 ரக துப்பாக்கியால் பஸ் உரிமையாளர் சுட்டுப் படுகொலை.

பஸ் உரிமையாளர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் ஹங்வெல்ல, நெலுவன்துடுவ பிரதேசத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

55 வயதுடைய குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

ரி – 56 ரக துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.