அநுரவை மீண்டும் சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே சங்குக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அமெரிக்கத் தூதுவர், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்தல், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவான கையோடு அவரை அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே சங் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.