இந்தத் தடவை ஈ.பி.டி.பி. கொழும்பிலும் போட்டி!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சி கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்தார்.

ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நான் நிச்சயம் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வேன்.

தேர்தலின் பின்னர் ஆட்சியில் இருப்பவர்களுடன் மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி எனும் கட்சியின் கொள்கையின்படி, இணைந்து செயற்படவுள்ளேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.