காலிமுகதிடலில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் , சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

கடந்த கால அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் , அந்தந்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

அதன்படி, இன்று 19 வாகனங்கள் விடுவிக்கப்பட்டதுடன், அதில் சுமார் 15 வாகனங்கள் முன்னறிவிப்பின் பேரில் அந்த இடத்திற்கு வந்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டன.

வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து பெறப்பட்ட 08 வாகனங்கள், நிதி அமைச்சிலிருந்து பெறப்பட்ட 03 வாகனங்கள், தென் மாகாண சபை, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தலா 01 வாகனங்கள் என மொத்தம் 15 வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, மகேஷ் ஹேவாவிதாரண உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Leave A Reply

Your email address will not be published.