17 வயது மாணவன் அடித்துப் படுகொலை – மாத்தளையில் கொடூரம்.

தாக்குதலுக்கு இலக்கான 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் மாத்தளை – மடவலவுல்பத்த பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மடவளை – நாலந்தவத்தை பகுதியைச் சேர்ந்த மேற்படி மாணவன், நண்பர்கள் இருவருடன் மடவலவுல்பத்த பிரதேசத்துக்குச் சென்றிருந்தபோதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நண்பர் ஒருவரின் காதலியைச் சந்திப்பதற்காகக் சென்றிருந்தபோது, காதலியின் தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்ட குழுவினர் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

காயமடைந்த மூன்று மாணவர்களும் நாலந்தவத்தை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய காதலியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.