உகண்டாவில் மறைத்து வைக்கப்பட்ட பணம் குறித்து ஜனாதிபதிக்கு நாமல் சவால்

ராஜபக்ச ஆட்சி காலத்தில் உகண்டாவிலும் ஏனைய நாடுகளிலும் பல பில்லியன் டொலர்களை திருடி மறைத்து வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிற்கு மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது அனுர திஸாநாயக்க தனது X சமூக வலைத்தளக் கணக்கில் வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டு அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

பல வருடங்களாக ஜனாதிபதி உள்ளிட்ட குழுக்கள் தமது குடும்பத்தினர் பொதுமக்களின் பணத்தை திருடியதாக கூறி வருவதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய தருணம் இது என்றும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, ​​ராஜபக்சக்களால் திருடப்பட்ட பணம் உகாண்டாவிலும் ஏனைய நாடுகளிலும் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், தமது அரசாங்கத்தின் கீழ் உடனடியாக அந்தப் பணத்தை இலங்கைக்கு கொண்டுவருவதாகவும் திசைகாட்டியின் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் தெரிவித்ததை நாமல் ராஜபக்ச நினைவு கூர்ந்தார்.

Leave A Reply

Your email address will not be published.