குளவி கொட்டி 15 தொழிலாளர்கள் பாதிப்பு.

தலவாக்கலை, அக்கரபத்தன எல்பியன் தோட்டத்தில் நியூபிரஸ்டன் பிரிவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் 15 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இன்று காலை வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

பெண் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே குளவிகள் கொட்டின.

தொழிலாளர்கள் 15 பேரும் மன்றாசி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11 பேர் சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்குச் சென்றனர்.

எஞ்சிய 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
…………….

Leave A Reply

Your email address will not be published.