யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 8 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் – மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவிப்பு.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை 8 சுயேச்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளன என்று யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் அரச அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

அதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்க முடியும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.