தேர்தல் வந்தாலும் தேவையான மானியத்தை வழங்கலாம் – பஃபரல் அமைப்பு.

உர மானியங்களை உரிய காலத்தில் வழங்குவது மிகவும் அவசியமானது என பஃபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

சுகாதாரம், கல்வி, விவசாயம் போன்ற துறைகளுக்கு தேவைப்படும் நேரத்தில் மானியங்கள் வழங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும்.

தற்போது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, தொடர்ச்சியாக 06 மாதங்களாக பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட வேண்டிய மானியங்கள் கிடைக்கப்பெறாமையால் நீண்டகால பிரச்சினைகள் உருவாகலாம் என நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.