ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் குறைகளை கண்டறியுமாறு அறிவிப்பு.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தெரிவிக்குமாறு பணிப்புரைகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடையில் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

குறைபாடுகள் இருப்பின் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபரிடம் வழங்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.