அம்புலன்ஸ் வாகனம் மோதி பாதசாரி பரிதாப உயிரிழப்பு.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அம்புலன்ஸ் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மொலகொட பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின்போது படுகாயமடைந்த பாதசாரி கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் கேகாலை பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அம்புலன்ஸ் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள கேகாலை பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.