தப்பி ஓடுவது ஆரம்பம்… கொழும்பு குற்றப்பிரிவின் IP ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் சர்ச்சைக்குரிய விடயத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்து பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்ற இந்த அதிகாரி வரம்பற்ற சொத்துக்களை குவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த பொலிஸ் பரிசோதகர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முன்னர் தனது குடும்பத்தாரை நாட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தற்போது ஐரோப்பிய நாடு ஒன்றில் வசித்து வருவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.