ரணிலின் பாதுகாப்புக்காக 163 பேர் கொண்ட பாதுகாப்பு படையணி.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் வதந்திகள் அடிப்படையற்றவை என பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் 163 பேர் உள்ளனர்.

அவர்களில் 50 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், 06 உயரடுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் குழுவும் உள்ளடங்குவதாக பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.