இஸ்ரேலில் கத்திக்குத்து, துப்பாக்கிச்சூடு : பெண் காவல்துறை அதிகாரி மரணம்.

இஸ்ரேலின் தென்பகுதியில் நடத்தப்பட்ட கத்திக்குத்து, துப்பாக்கிச்சூட்டில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் மாண்டார்.

அது பயங்கரவாதத் தாக்குதல் என்று அதிகாரிகள் கூறினர்.

காஸா போர் ஓராண்டை எட்டும் வேளையில் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஒரு பேருந்து நிலையம் அருகே இருந்த McDonald உணவு நிலையத்தில் புகுந்து துப்பாக்கிக்காரர் தாக்குதல் நடத்தினார்.

மாண்டவர் 19 வயது எல்லைப் பாதுகாப்புக் காவல் அதிகாரி என்று கூறப்பட்டது. 10 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கொல்லப்பட்டார். அவர் யார் என்று காவல்துறை அடையாளம் சொல்லவில்லை.

ஆனால், சந்தேக நபர் சிறுபான்மை Bedouin இனத்தைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.