நிதி மோசடி செய்த 40 வெளிநாட்டவர்கள் CID வலையில்!

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹங்வெல்ல பிரதேசத்தில் இரண்டு இடங்களான , கம்பஹா ஹன்வெல்ல வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் அவிசாவளை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்று ஆகியன தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இணையம் ஊடாக நிதி மோசடி செய்த 40 வெளிநாட்டு பிரஜைகள் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதியை சுற்றிவளைத்து பரிசோதித்த போது இந்த வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.