வடமராட்சி கிழக்கு விபத்தில் முன்னாள் போராளி மரணம்!

யாழ். வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளியான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு, மாமுனைப் பகுதியைச் சேர்ந்த கடற்புலிகளின் முன்னாள் போராளியான புரட்சி என அழைக்கப்படும் நடேசு பரமேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடந்த 4ஆம் திகதி இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.