பெண்ணொருவர் குத்திப் படுகொலை – கொழும்பில் கொடூரம்.

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிக்கல் சந்திப் பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் 32 வயது மதிக்கத்தக்கவர் எனத் தெரியவருகின்றது.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.