கேரள மதகுருவுக்கு கார்டினல் பதவி: போப் பிரான்சிஸ் அறிவிப்பு.

கேரளாவைச் சேர்ந்த மதகுரு மான்சிஞர் மான்சிக்னர் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட்டி, தற்போது வாடிகனில் உள்ளார். 51 வயதான அவர் கேரளாவின் சங்கனாச்சேரி சீரோ மலபார் உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்.

2020ஆம் ஆண்டு முதல் போப் பிரான்சிஸின் அனைத்துலகப் பயணங்களை ஏற்பாடு செய்துவரும் கேரளாவைச் சேர்ந்த பாதிரியாருக்கு கார்டினல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ரோமன் கத்தோலிக்க திருச்சபை மொத்தம் 21 மதகுருமார்களுக்கு “கார்டினல்” பதவி உயர்வு வழங்கியுள்ளது.

கார்டினல் பதவி உயர்வுக்கான விழா டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.