இரண்டு கேரள கஞ்சா பொட்டலங்களுடன் இராணுவ சிப்பாய் கைது.

இரண்டு கேரள கஞ்சா பொதிகளை வைத்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இது இடம்பெற்றுள்ளது.

அங்கு 02 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா இரண்டு பார்சல்களை வைத்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹாஓயா பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.