பல திசைகாட்டி ஆதரவாளர்களின் கனவுகள் சிதைந்தன.. பலருக்கு வாய்ப்பு இல்லை.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்புமனுவை பெற மிக அதிக அளவில் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வேட்புமனுவை எதிர்பார்த்து காத்திருந்தும் அது கிடைக்காத சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரும் கடுமையாக உழைத்த சிலர், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடலாம் என நம்புகின்றனர்.

ஆனால் ஒரு கட்சியில் இருந்து போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதாலும், பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாலும் பலர் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்நிலைமை தொடர்பில் பலர் அதிருப்தியில் இருப்பது தெரியவருகிறது.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.