அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் பிரதான சிறைச்சாலை அதிகாரி உட்பட மூவர் பணி இடைநிறுத்தம்!

அங்குனுகொலபலஸ்ஸ  சிறைச்சாலையின் வெளிப்புற வளாகத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 4 கைதிகள் தப்பிச் சென்றமை தொடர்பிலேயே பிரதான சிறைச்சாலையின் அதிகாரியின் பணிப்புரையின் பேரில் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தலைமை சிறைக் காவலர், கைதிகளை தூய்மைப் பணிக்கு அழைத்துச் சென்ற இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தூய்மைக் குழுவுக்கு பொறுப்பாக இருந்த கட்டுப்பாட்டாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய 4 கைதிகளில் 3 பேர் இதுவரை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.