பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: ராஜபக்சே சகோதரர்கள் முடிவு.

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ராஜபக்சே சகோதரர்கள் முடிவு செய்துள்ளனர்.

முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே, அவர்களின் சகோதரர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான பசில் ராஜபக்சே, சமல் ராஜபக்சே ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.

ஆயினும், மகிந்த ராஜபக்சேவின் மகனும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்சே இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பரப்புரைக்குத் தலைமை தாங்குவார் என்றும் அவர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவார்.

வரும் நவம்பர் 14ஆம் தேதி இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.