இணைய நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 சீனர்கள் குண்டசாலையில் கைது.

ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் அடங்கிய குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி, குண்டசாலையில் உள்ள குறைந்தது 47 அறைகளைக் கொண்ட சொகுசு பங்களா ஒன்றில் வைத்தே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

சந்தேகநபர்களால் 15 கணனிகள் மற்றும் 300 கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.