தீவக மக்களைச் சந்தித்தார் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ்..

யாழ் புங்குடுத்தீவுப் பகுதிக்கு, விஜயம் ஒன்றை மேற்கொண்ட கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ்   மக்களைச் சந்தித்து  உரையாடியதாக, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (12.10) சனிக்கிழமை,காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த  மக்கள் சந்திப்பின் போது,

சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் தீவக மக்களாகிய தாங்கள் நீண்டகாலமாக எதிர் நோக்கும் போக்குவரத்துப் பிரச்சினைகள்,பொருளாதாரப் பிரச்சினைகள்   உள்ளிட்ட பல்வேறு  விடயங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டன.

இந்த மக்கள் சந்திப்பின்போது சிவில் சமூகம் . மீனவ சமூகம்  தீவகத்தின் பெண்கள் வலய அமைப்பு மற்றும் ‘மெசிடோ’ நிறுவனத்தின் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

ரோகினி நிஷாந்தன்

Leave A Reply

Your email address will not be published.