சுங்கத்தை ஏமாற்றிய சொகுசு Mitsubishi Montero ஜீப் வாகனம் பறிமுதல் !

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்ட சொகுசு Mitsubishi Montero ஜீப் வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதுளை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான Mitsubishi Montero ஜீப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளார்.

போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து அரசாங்கத்திற்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரியை மோசடி செய்து இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.