சீரற்ற காலநிலையால் மூவர் பரிதாப மரணம்!

கொழும்பு, கம்பஹா உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 34 ஆயிரத்து 492 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை, வெள்ளத்தால் மூவர் உயிரிழந்துள்ளனர். இருவர் காயம் அடைந்துள்ளனர்.

240 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 6 ஆயிரத்து 963 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.