ஆட்சிக்கு வந்தவுடனே புதிய வருமானம் இல்லை.. நாட்டை நடத்த கடன் வாங்கத்தான் வேண்டும்..- விஜித ஹேரத்.

இலங்கை கடனில் இயங்குவதாகவும் அரசாங்கம் வந்த 24 மணித்தியாலங்களுக்குள் புதிய வருமானம் கிடைக்காது எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே, உள்ளூர் கடன் பெறும் வழிமுறைகள் பேணப்பட வேண்டும் என்று அவர் விளக்கினார்.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்று குறுகிய காலத்திற்குள் நான்கு தடவைகள் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பிணைப்பத்திரங்கள் வழங்கப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.