நடு வீதியில் சுட்டுக் கொலை.

நேற்று (15) மாலை மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்வெல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவரை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாத்தறை கோட்டை பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

தற்போதைய விசாரணையின்படி உயிரிழந்தவர் முச்சக்கரவண்டியில் பயணித்த போது காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், இதற்காக பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.