தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுகம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் இம்முறை சு.தவபாலன் தலைமையில் எ.செல்வநாயகம், றொசின் பெர்னாண்டோ, தி.கிந்துஜன், தே.தினேஷ்குமார், பா.ஆனந்தபிரசாத், ச.ரகுமதி, சோ.பிரசாத், அ.ரொணிடிமல் ஆகியோரைக் கொண்ட வேட்பாளர் குழு சைக்கிள் சின்னத்தில் களமிறங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.