இலங்கைக்கு வந்து குவியும் இந்திய சுற்றுலாப் பயணிகள்.

இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் 55 ஆயிரத்து 353 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 16 ஆயிரத்து 163 பேரும், சீனாவிலிருந்து 3 ஆயிரத்து 963 பேரும், பிரித்தானியாவிலிருந்து 3 ஆயிரத்து 926 பேரும் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.