பஸ் தரிப்பிடத்தில் பெண்ணின் சடலம்.

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் நிலையத்தினுள் ஒருவர் இறந்து தரையில் சடலமாகக் கிடக்கின்றார் என்று நுவரெலியா மாநகர சபை ஊழியர் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரும் அவருடன் இன்னுமொரு பெண்ணும் கடந்த 5 நாட்களுக்கு முன்பிலிருந்து நுவரெலியா பஸ் தரிப்பிடத்தில் யாசகம் பெற்று வந்தனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், அதிக குளிர் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.