எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய வேட்பு மனுக்களுக்கு அனுமதியில்லை… பழைய வேட்புமனுக்களின் படி தேர்தலை நடத்த ஆணைக்குழு முடிவு!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோரப்பட மாட்டாது எனவும், முன்னர் கோரப்பட்ட வேட்புமனுக்களின் பிரகாரம் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தினால் அநீதி ஏற்படுமென கருதும் எந்தவொரு தரப்பினரும் நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.