ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தற்போதைய பாதுகாப்பு செயலாளர் ரவி செனவிரத்னவை கைது செய்ய பரிந்துரைகள் உள்ளன : இந்திக்க அனுருத்த

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையில் தற்போதைய பாதுகாப்பு செயலாளர் ரவி சேனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.

எனவே கத்தோலிக்க மக்களுக்கு நீதி வழங்குமாறு தற்போதைய ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.