லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றிய ஒருவர், கட்டுகஸ்தோட்டையில் லொஹான் ரத்வத்தவுக்குச் சொந்தமான அலுவலகத்தின் அருகில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

அவரின் சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்று கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் சுடப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.