லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச் சூட்டில் பலி.

கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்கஅமைச்சருமான லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த அவர் கண்டி தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (20.10) ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மஹய்யாவவில் உள்ள இல்ல வளாக  அலுவலக கட்டிடத்தில் வைத்து அவர் சுடப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

இது துப்பாக்கிச் சூடா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகள்இடம்பெற்று வருகிறன.

Leave A Reply

Your email address will not be published.