பெண்ணிடமிருந்து சங்கிலி கொள்ளை.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பெண்ணொருவரிடம் இருந்து தங்கச் சங்கிலியொன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.

மன்னாகண்டல் பகுதியில் குடும்பமாகப் பயணித்துக் கொண்டிருந்தபோதே, பிறிதொரு மோட்டார்சைக்கிளில் வந்த நபர் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.