யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கனடாவில் சுட்டுக் கொலை

யாழ்ப்பாணம், மைலிட்டி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் கனடாவில் பணிபுரிய சென்றிருந்த போது , நேற்று (21) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பஞ்சலிங்கம் பார்த்தீபன் என்பவரே கனடாவின் மார்க்கம் ( Markham) நகரில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது குடியிருப்புக்கு அருகிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அவரை சுட்டுக் கொன்றதற்கான காரணம் அல்லது சுட்டது யார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் உடனடியாக படுகாயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.