அருகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் கைது… பெரும் பேரழிவை தடுத்த இந்திய உளவுத்துறை!

இந்திய உளவுத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கண்காணிப்பின் பின்னர், இலங்கையில் , இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் சர்ஃபிங் சூழலால் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக அறியப்படும் அருகம்பே மீதான தாக்குதல், அங்கு சுதந்திரமாக பயணிக்கும் இஸ்ரேலியர்களை குறிவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலைப் போலவே, இந்திய புலனாய்வு அமைப்புகள் அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெயர்கள், திகதிகள் மற்றும் விபரங்களுடன் வழங்கியிருந்தன. உளவுத்துறையின் தகவலின்படி, அக்டோபர் 19 முதல் 21 ஆம் தேதிக்குள் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கிலிருந்து வந்தவர் என்றும் இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்காக அவர்களுக்கு சுமார் 50 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாகவும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் அண்மைய நாட்களில் இஸ்ரேல் தாக்குதலில் கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக இலங்கையில் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவல் கிடைத்ததையடுத்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்தனர்.

அருகம்பே பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்திய பாதுகாப்புப் படையினர் அங்குள்ள வெளிநாட்டினரின் பாதுகாப்பையும் உறுதி செய்தனர்

அறுகம்பே பிரதேசத்தின் பாதுகாப்பின் பின்னணியில் இஸ்ரேலியர்கள் வருகை தரும் வெலிகம உட்பட தென் மாகாணத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

பிந்திய செய்தி

இந்த நாட்டில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் மற்றையவர் கொழும்பு பகுதியை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர்.

ஒருவரின் தந்தை மாலத்தீவைச் சேர்ந்தவர். தாய் இலங்கையை சேர்ந்தவர்.

தாக்குதலை நடத்த சம்மதித்த பின்னர் 50 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியதாக இந்த சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

அருகம்பே சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதனுடன், பல நாடுகளும் நேற்று இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளன.

இலங்கையின் சுற்றுலா விடுதிகளை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் தனது பிரஜைகளை நேற்று கூறியிருந்தது.

2வது பிந்திய செய்தி

இலங்கையில் இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (TID) இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து குறிப்பாக இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள பிரபல சர்ஃபிங் ரிசார்ட்டான அருகம் பேயில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

“இஸ்ரேலியர்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தில் அவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன” என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

அருகம்பே மற்றும் பொத்துவில் பகுதிகளில் 500 பொலிஸ் உத்தியோகத்தர்களும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், இஸ்ரேலிய குடிமக்களை உடனடியாக தென்னிலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலாப் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது, மேலும் அருகம் வளைகுடா பகுதியை அடையாளம் மற்றும் பெரிய கூட்டங்களை தவிர்தது நான்காம் நிலை அச்சுறுத்தலாக வகைப்படுத்தியது.

4ம் நிலை அச்சுறுத்தல் என்பது , ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் தங்களது நாடுகளால் உதவ முடியாத அபாய அறிவிப்பாகும்.

“இஸ்ரேலிய பாதுகாப்பு ஸ்தாபனம் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுவதுடன் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது” என கூறியது.

இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் பெரிய பொதுக் கூட்டங்களை நடத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அருகம்பேயில் தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாகக் கூறி, பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “அமெரிக்க குடிமக்கள் மறு அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய தூதரகம் மற்றும் இங்கிலாந்து ஆகியவை அதன் குடிமக்களுக்கும் இதேபோன்ற எச்சரிக்கைகளை வெளியிட்டன, அவர்கள் விழிப்புடன் இருக்கவும், பெரிய கூட்டங்களைத் தவிர்க்கவும் வலியுறுத்தியது.

அனைத்து வெளிநாட்டினருக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். “உக்ரைனில் போர் மற்றும் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் உளவுத்துறை சேவைகளுடன் ஒருங்கிணைத்து வருகிறோம்” என்று தல்துவ கூறினார்.

சுற்றுலாப் பயணிகள் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து புகாரளிக்க ஹாட்லைன் (1997) நிறுவப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.