இஸ்ரேலியர்கள் இலங்கையில் சட்டவிரோத வியாபாரிகளாக : ரெஹான் ஜெயவிக்ரம குற்றஞ்சாட்டு

இலங்கையின் சில பகுதிகளில் இஸ்ரேலியர்கள் சட்டவிரோதமான வர்த்தகங்களை நடத்தி வருவதாக SJB நாடாளுமன்ற வேட்பாளர் ரெஹான் ஜெயவிக்ரம குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரகம்ப பிரதேசத்தில் நீண்டகாலமாக சில இஸ்ரேலியர்கள் சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவற்றை முடிவுக்குக் கொண்டு வந்து நியாயமான நடைமுறையை உறுதிப்படுத்துமாறு அரசாங்கங்களுக்கு எத்தனையோ கோரிக்கைகள் அனுப்பப்பட்டும் அவை புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலைமை காரணமாக ஒரு நாடு என்ற வகையில் நாம் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாகவும் அது இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.