சிரியாவின் மத்திய, தெற்குப் பகுதி ராணுவத் தளங்கள் மீது இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல்.

சிரியாவின் மத்திய, தெற்குப் பகுதிகளில் உள்ள சில ராணுவத் தளங்கள் மீது இஸ்‌ரேல் இன்று (26.10) தவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியா,அரசாங்கச் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்‌ரேல் தனது வசமுள்ள கோலான் ஹைட்ஸ் பகுதியிலிருந்தும் லெபனானில் உள்ள சில பகுதிகளிலிருந்தும் சிரியாவை நோக்கி ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகதாகவும்,
இஸ்‌ரேல் பாய்ச்சிய ஏவுகணைகளைத் தனது படைகள் சுட்டு வீழ்த்தியதாகவும், அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கசில் வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.