ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை : நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என சரியாக கூறுவார்..

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நவம்பர் 21ஆம் திகதி 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளார்.
புதிய பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும் நவம்பர் 21 ஆம் திகதி பிற்பகல் 03.00 மணிக்கு ஜனாதிபதி கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.