சஜித் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக நியமனம்.

SJB தலைவரான சஜித் பிரேமதாச பத்தாவது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார்.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் இது அமைந்துள்ளது.
சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.