நாடாளுமன்றம் நாளை (03) கூடவுள்ளது.

நாடாளுமன்றம் நாளை (03) முதல் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை கூடவுள்ளது.
இதன்படி, நாளை (03) நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இது தொடர்பான விவாதம் நடைபெறும்.