சபாநாயகர் ராஜினாமா

சபாநாயகர் அசோக சபுமல் ரங்வால தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதில்
“கடந்த சில நாட்களாக என்னுடைய கல்வி அடைவு சம்மந்தமாக வாத விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நான் எந்த இடத்திலும் பொய்யான தகவல்களை வழங்கவில்லை.
ஆனால் அந்த கல்வித்தகைமையை உறுதி செய்ய கூடிய ஆவணங்கள் என்னிடம் இல்லை. அதனை சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்தே பெற வேண்டியுள்ளது. எனவே அது இப்போதைக்கு கடினமான விடயம்.
எனக்கு பேராசிரியர் பட்டம் தந்த ஜப்பான் வசேதா பல்கலைகழகத்தோடு இணைந்த ஆவணங்களை என்னால் முன்வைக்க முடியும். அதனை நான் விரைவில் முன்வைப்பேன்.
ஆனால் எழுந்துள்ள நிலைமையை கருத்திற்கொண்டு எங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்கள் நிர்கதிக்கு உள்ளாகாமல் இருக்க நான் ஏற்றுள்ள சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். ”