15 அமைப்பாளர்களை பதவியில் இருந்து நீக்கிய ஹிருணிகா பிரேமச்சந்திர.

சமகி ஜன பலவேகவின் கடுவெல தொகுதி அமைப்பாளர் திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர, 15 அமைப்பாளர்களை பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறு அமைப்பாளர்களை நியமித்துள்ளார்.
இது தொடர்பில் திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் வினவிய போது, கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
பதவியில் இருந்து நீக்கப்பட்ட அமைப்பாளர்கள் மற்றும் கோட்ட அமைப்பாளர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கு ஆதரவளிக்காமல் வேறு வேட்பாளருக்கு ஆதரவளித்து இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியதே இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரதேச அமைப்பாளர் பிரேமரஞ்சித் பெரேராவிடம் நடத்திய விசாரணையில், அமைப்பாளரைத் தன்னிச்சையாக நீக்கியதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.
இது தொடர்பில் கட்சித் தலைவருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.