நோயாளர் காவுவண்டி மீது உழவு இயந்திரம் மோதி விபத்து.

முழங்காவிலில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியே விபத்துகுள்ளாகியுள்ளது.
பூநகரிக்கும் பரந்தனுக்கும் இடைப்பட்ட பகுதியில்,நெல்லு மூட்டைகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் நோயாளர் காவு வண்டியின் முன் பக்கம் மிகவும் சேதமடைந்துள்ளது.